Date:

ரணில் முன்வைத்த திருத்தம் சபாநாயகரால் நிராகரிப்பு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை, அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாக கருதவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அதேவேளை, அது தொடர்பான வாக்கெடுப்பும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...