Date:

சஜித்தின் பதவிக்கு ஆபத்து

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பராக இருந்தால் சஜித் அணியை சேர்ந்த ஹரீன் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவொன்று அரசாங்கத்தின் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளன.

இவ்வாறு நடக்குமாக இருந்தால் பொதுஜன பெரமுனவினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கும் வாய்ப்புள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாச தரப்பினரால் பெரும்பான்மையை காட்டமுடியாது போகுமாக இருந்தால் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடலாம்.

இந்நிலையில் தாமதிக்காது இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்க வேண்டும் அவரின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...