Date:

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – நாமல்

முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக பல வதந்திகள் பரவுகின்றன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“எனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு என்று தனது குடும்பத்தினர் நம்புவதாகவும் தாங்கள் எப்போதும் எமது மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...