Date:

வன்முறையானது வன்முறையையே பிறப்பிக்கும்

வன்முறையானது வன்முறையையே பிறப்பிக்கும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

 

அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிர்வாகம் உறுதியளித்த பொருளாதார தீர்வொன்று அவசியமாகும்.

 

கொழும்பில் இன்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அவரது அறிக்கை வந்துள்ளது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு முன்னால் உள்ள “மைன கோ கம” போராட்ட தளம் மற்றும் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ‘கோத கோ கமா’ போராட்ட தளம் ஆகிய இரண்டிலும் போராட்டக்காரர்களை தாக்கியதுடன், எதிர்ப்பு தொடர்பான பொருட்களை அழித்துள்ளனர்.

 

இன்று காலை அலரிமாளிகையில் பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து அவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய...