Date:

நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த வருடம் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4,238,760 ஆக குறைவடைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 4,272,289 ஆக காணப்பட்டது.

இந்த தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 33,529ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 31,174 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஏனைய பாடசாலைகளில் 2,055 இனால் குறைவடைந்துள்ளது.

அத்துடன் நாடாளவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 994 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...