Date:

மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகப் போகிறாரா?!

நேற்றைய (5) தினம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

 

முன்னதாக பிரதி சபாநாயகராக பதவி வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்

 

எனினும் ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.

 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார்.

 

அதற்கமைய, அவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.

 

இந்நிலையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்த பிரதி சபாநாயகர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்காக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 

அதற்கமைய 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்.

 

இந்நிலையில் தான் மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜயின் இறுதி படத்தின் பாடல் வெளியானது (VIDEO)

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்...

2026 ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரீட் மனு தாக்குதல்

ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு...

காலியில் பெருந்தொகை ஹெரோயினுடன் 3 பேர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன்...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...