Date:

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

கடந்த மாதம் 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை நடத்திலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து வருவதாகவும், ஏப்ரல் 18ஆம் திகதி அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்த நட்டம் 1613 மில்லியன் ரூபாவாகும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...