Date:

இரகசியத் தன்மை பற்றி பேசிக்கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் தவறு என எச்சரித்த சபாநாயகர்

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்களிப்பதற்காக பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் குறித்த வாக்குசீட்டினை பகிரங்கமாக சபையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வாக்களிப்பவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதற்கு பொறுப்பு எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தான் வாக்களித்த வாக்குசீட்டை காண்பித்தபோது, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கைப்பேசியில் படம் பிடித்தனர்.

உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டு, புகைப்படம் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என எச்சரித்த சபாநாயகர் இரகசியத் தன்மை பற்றி பேசிக்கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் தவறு என்றும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு ஜனாதிபதி...