Date:

நகர்ப்புற எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்- லிட்ரோ நிறுவனம்

அடுத்த சில வாரங்களில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்ச எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்து தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெரும்பாலான எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், நகர்ப்புற விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

அத்துடன் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் மேலும் பல வழங்குநர்களை தெரிவு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...