ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அவர்கள் வீதிக்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நெளும் மாவத்தை பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அண்மித்த வீதியை பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி தடை செய்து வருகின்றனர்.