Date:

வார இறுதிக்கான மின்தடை குறித்த அறிவிப்பு

வார இறுதியில் 3 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், நாளை மறுதினம் 3 மணித்தியாலம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஆரம்பிக்கும் IPL

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்....

நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு...

மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு...

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373