Date:

இலங்கைக்கு அத்தியவசிய பொருட்களை வழங்க தயாராகும் சீனா

இலங்கைக்கு அரிசி, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் GL பீரிஸ் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருக்கு இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான சீன தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசாங்கத்தின் நேரடி ஒத்துழைப்பு மற்றும் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு உள்ளிட்ட வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட் 2 ஆயிரம் மெட்ரின் டொன் அரிசி உள்ளிட்ட 5 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இலங்கைக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1 தசம் 5 மில்லியன் renminbi பெறுமதியான உணவுப் பொதியையும் இலங்கைக்கு வழங்க சீனா இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...