Date:

அமைச்சரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளடக்கப்பட வேண்டும்- ஜனாதிபதியிடம் கோரிக்கை

எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான அமைச்சரவையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு சரியான பொருளாதார மற்றும் அரசியல் தீர்வை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்தி முன்கொண்டு செல்ல ஆளுந்தரப்பு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஆரம்பிக்கும் IPL

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்....

நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு...

மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு...

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373