காலி முகத்திடலுக்கு சீருடையுடன்சென்று அதற்கு ஆதரவு தெரிவித்த பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குட்டிகல காவல்நிலையத்தில் சேவை புரிந்து வந்த டப்ளியூ.எம்.அமரதாச (30158) காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றிருந்தார்.
இதுதொடர்பில், அவர் கடந்த 14 ஆம்திகதி பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, மறுநாள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.