அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி காபந்து அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அமுலில் உள்ள போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அவ்வாறான எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.