Date:

எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவா இந்த சம்பவம் இடம்பெற்றது? – பாராளுமன்றத்தில் கேள்வி

ரம்புக்கனையில் நேற்று கொல்லப்பட்டவரின் அடையாளம் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தமது குழு ஒன்றில் கருத்துப் பகிர்ந்துள்ளமை குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்றும் இவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் அவர் குழு ஒன்றில் கருத்தை பகிர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் கொல்லப்பட்டவர், எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவா இந்த சம்பவம் இடம்பெற்றது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவத்துக்கு பின்னால், போராட்டங்களை அடக்கும் அல்லது பயமுறுத்தும் செயற்பாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...