Date:

Airtel Lankaவின் மேம்படுத்தப்பட்ட சேவை மற்றும் மதிப்புமிக்க முதலீடுகள் NBEA 2021இல் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

இளைஞர்கள் மத்தியில் இலங்கையின் மிகவும் விருப்பத்தக்க தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka மீண்டும் தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் (NBEA) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் (NCCSL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருது வழங்கும் நிகழ்வில் Airtel நிறுவனத்திற்கு ‘பிற சேவைகள்/பிற துறைகள்’ (Other Services / Other Sectors) பிரிவில் மெரிட் விருது வழங்கப்பட்டது.

புத்தாக்கமான மற்றும் பலனளிக்கும் வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்கும் அதே வேளையில், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து Airtel Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷீஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “இத்தகைய சிறப்புமிக்க நிறுவனங்களின் மத்தியில் அங்கீகாரம் பெறுவது ஒரு கௌரவமாகும். கடந்த ஆண்டு வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான மதிப்பின் ஒரு பாடமாக இது அமைந்துள்ளது. சவாலான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ளும் அதேவேளையில், இலங்கையின் ஆற்றலை நாங்கள் தொடர்ந்து நம்பி வருகிறோம், மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பை உருவாக்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் Airtel நிறுவனம் இதே பிரிவில் 2019இல் அங்கீகரிக்கப்பட்டு விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. NBEA என்பது இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனத்தால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முன்னோடி விருது வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இலங்கையில் சிறந்த கூட்டுத்தாபனத்தில் சிறந்த வர்த்தகங்களை அங்கீகரிக்கும் முதன்மையான தேசிய தளமாக இது ஒரு வலுவான நற்பெயரைப் பேணி வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373