Date:

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர்

7வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொழும்பு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த நபர் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக வெளியேற்ற இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்தானந்த உள்ளிட்ட குழுவினருக்கு ஆதரவாக பேரணியாக சென்ற நபர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக சந்தேகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வடை விற்பனை செய்துள்ளார்.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று அவரை தாக்க முயற்சித்த போது தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.

மன்னித்து விடுமாறு கூறினால் குறித்த நபர் ஏதோ தவறு செய்து வருகின்றார், உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என இளைஞர்கள் கூறியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

எனினும் அவர் அங்கு என்ன செய்து வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...