நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆறாவது நாளாக தொடரும் போராட்டத்தில் புத்தாண்டையும் அந்த இடத்தில் சம்பிரதாயங்களோடு கொண்டாடி வருகின்றனர்.