யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன், பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.