இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் 40, 000மெட்ரிக் டன் அரிசியின் முதல் தொகுதி இந்த வார இறுதியில் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த அரிசி, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பன, ஒரு கிலோகிராம், 110 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.