Date:

மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க சர்வதேச உதவியை நாடும் இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக பல சர்வதேச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக மருந்துப் பொருட்கள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் நேற்று தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...