முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

 

பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாவால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், முச்சக்கர வண்டி கட்டணங்களைக் முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையிடம் கட்டணத் திருத்தத்தைக் கோர முடியாது என்றும், முறைப்படுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமே உள்ளதால் விலையைக் கட்டுப்படுத்தும் உரிமை தமக்கு இல்லை என அவ்அதிகார சபை தெரிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 

இதற்கமைய, சட்டபூர்வமான கட்டணத் திருத்தம் வரும் வரை, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபாயும் அடங்கிய பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிட வேண்டியுள்ளதாக ரோஹண பெரேரா மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாக

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான டெங்கு...

Breaking: ரவி கருணாநாயக்க கைது!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுட்டுள்ளார்.