Date:

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானர் என கூறப்படும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் செல்லும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வலுவடைந்து வரும் நிலையிலேயே இந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் மனைவி உள்ளிட்ட சிலர் நேற்று காலை நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...