Date:

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா?

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று  உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.

அமைச்சர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேற்றிரவு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

நாட்டில் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருந்தனர்.

இதன்மூலம் அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் உருவாகும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் சமகால பிரதமர் பதவி விலகாமல் அமைச்சரவை கலைக்க முடியாது என அரசியலமைப்பின் 49ஆவது சரத்து வெளிப்படுத்துவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...