Date:

நாட்டில் இடைக்கால அரசாங்கம்?

நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பிலான யோசனையை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுடன், வாசுதேவ நாணயக்கார மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அமைச்சரவையினால் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வை முன்வைக்க முடியாது என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போதைய அமைச்சரவையைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக அனைத்துக் கட்சிகளுடனும் உடன்பாடொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலொன்றுக்குச் செல்வதை விட, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதே பொருத்தமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373