Date:

சீரற்ற வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் இல்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை மின் துண்டிப்பு குறித்து 12 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, கிரிபத்கொடை, கண்டி, பெராதெனிய, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலாலை, சிலாபம் ஆகிய இடங்களில் இவ்வாறு மின்சாரத் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

மரங்கள் வீழ்வு, மண்மேடு சரிவு போன்ற காரணங்களால்  சில பாதைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, வீடுகளுக்கும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...

நாளைய காலநிலை : எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை தினம் (05) வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கிய இலங்கை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...