Date:

நான்கைந்து அதிகாரிகள் சீருடையிலும் சிவில் உடையிலும் நம்மை தாக்கினர்

நேற்றிரவு மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு ஊடகவியலாளரும் அவரது மனைவியும் தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்துப் பேசினர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பாளர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் தாக்கப்பட்டனர், அதே நேரத்தில் அரசாங்கம் அதை ‘ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தியது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதந்திர வீடியோ ஊடகவியலாளர் சுமேதா சஞ்சேவா ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, பொலிசார் கும்பலாகத் தன்னைத் தாக்கியபோது தான் தரையில் விழுந்துவிட்டேன்.

ஏறக்குறைய நான்கைந்து அதிகாரிகள் சீருடையிலும் சிவில் உடையிலும் தன்னைத் தாக்கியதாக சுமேத சஞ்சேவா கூறினார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் குறைந்தது ஏழு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக அந்த இடத்திற்கு வந்த ராகம வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர் ஒருவரும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவருடன் தொலைபேசி உரையாடலின் போது தனது கணவரும் ஏனைய எதிர்ப்பாளர்களும் பொலிஸாரால் தாக்கப்பட்டதை தான் கேட்டதாக அந்த நபரின் மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தனது கணவரின் இருப்பிடம் குறித்து விசாரிக்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...