Date:

கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது

நுகேகொடை – மிரிஹான பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ​ழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் சாதாரண சட்டத்தை தவிர்ந்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...