Date:

எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு எதிராக மனுத்தாக்கல்

மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு PUCSL உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது.

நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் செயல்படாமல் உள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அரசாங்கத்தினால் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியவில்லை.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு மற்றும் வரிசையில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...