Date:

பாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முற்பகல் வேளையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 10 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால் இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் உரிய நேரத்துக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் 10 தசம் 39 புள்ளிகளினால் அதாவது 314 தசம் 96 புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 2 ஆயிரத்து 716 தசம் 20 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6 தசம் 20 புள்ளிகளினால், அதாவது 552 தசம் 18 புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 8 ஆயிரத்து 351 தசம் 69 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் இன்று 2 கோடியே 55 இலட்சத்து 20 ஆயிரத்து 13 பங்குகள் பரிமாறப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 125 கோடியே 57 இலட்சத்து 59 ஆயிரத்து 330 ரூபா 60 சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373