பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக PEO TV தெரிவித்துள்ளது.
அலைவரிசைகள் நிறுத்தப்பட்டதை அறிவிக்கும் சிறப்பு அறிவிப்பில் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது.
PEO TV மேலும் வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் விரைவில் சேவையை மீட்டெடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
அலைவரிசைகள் இடைநிறுத்தம் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒளிபரப்பையும் பாதித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளும் ஒளிபரப்பப்படவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியை உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்ப விரும்பிய உள்ளூர் தொலைக்காட்சி சேனலும் விலகியுள்ளது.
டொலரில் பணம் செலுத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக அலைவரிசை பின்வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.