Date:

எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணை?

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1, 200 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மையால், மதிய நேரத்தில் 300 மெகாவொட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்கமுடியும்.

அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1, 700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்றபோதிலும், எரிபொருள் இன்மையால், 1,000 மெகாவொட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும்.

ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1, 800 மெகாவொட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது.

எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், 1,500 மெட்ரிக் டன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.

எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், எரிபொருள் கிடைக்கவில்லை.

தாங்கள் அறிந்த வகையில், இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் 10 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்த நிலையில், வரும் நாட்களில், 12 மணித்தியாலங்களாகவும், 15 மணித்தியாலங்களாகவும் அதிகரிக்க வேண்டி ஏற்படக்கூடும்.

எனவே, மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரத்தைக் கூறுவது சிறந்ததாகும்.

விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொடுத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இயன்றளவு குறைக்க முடியும் என அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக, மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...