Date:

பேரிச்சம் பழத்தின் வரிக் குறைப்பு இன முரண்பாடுகளைத் தூண்டும் சூழ்ச்சியாகும்-அசேல சம்பத்

ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பேரிச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியை 1 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் இன முரண்பாடுகளைத் தூண்டும் ஒரு சூழ்ச்சி என மக்கள் உரிமைகள் பாதுகாப்புக்கான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலையேற்றத்தினால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், இனவாதத்தை தூண்டும் முயற்சிகள் மேற்கொள் ளப்படுவதாக மக்கள் உரிமைகள் பாதுகாப் புக்கான அறக்கட்டளையின் தலைவரான அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தடை செய்யப்பட்ட பட்டியலில் பேரிச்சம் பழம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், வரியைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் முஸ்லிம் சமூகம் மத்தியில் ஒரு சம்பியனாக இருக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிர்வாகம் சமூகங்களைப் பிரித்து அதிகாரத்தைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...