Date:

சத்திர சிகிச்சைகளை இடைநிறுத்தும் தீர்மானத்தை பேராதனை வைத்தியசாலை நிர்வாகம் மீளப்பெற்றது

பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ளதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மருத்துவ வழங்கல் பிரிவினால், மருந்து பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் வழமையாக அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடை நிறுத்துவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்விட்டர் பதிவு  ஒன்றை இட்டுள்ளார்

அதில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்து ஆராயுமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...