Date:

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தற்சமயம் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.

முன்னதாக அவர், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை இந்திய வெளிவிவகார அமைச்சரின், இலங்கை விஜயம் அமைந்துள்ளதுடன், நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...