Date:

மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம்

தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் வரை உத்தேச மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு மின் அலகு உற்பத்திக்கு 40 ரூபா செலவிடப்படுகிறது.

எனினும், ஒரு மின் அலகுக்கு 8 ரூபாவுக்கும் குறைவான கட்டணமே அறிவிடப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்தும் விநியோகத்தை முன்னெடுத்து செல்வதற்கு உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, அமைச்சரவையினால் மின்சார சபையிடம் இருந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கோரப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த யோசனை தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நீர்வழங்கல் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...