Date:

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த இ.தொ.காங்கிரஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளதா?!

அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்திருந்தது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டிருப்பதால் அந்த மாநாட்டை புறக்கணித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் தமக்கு அமைச்சுப் பதவியை கோரியதாகவும் அதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த தகவலும் உண்மைக்கு புறம்பானது என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜனாதிபதியுடன் கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜீவன் தொண்டமானை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...