வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஐந்து கிலோ நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா கிலோ 130 ரூபாவுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 160 ரூபாவுக் கும் பருப்பு கிலோ 360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
நுகர்வோருக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் சிவப்பு பருப்பை வழங்குமாறு நிர்வாகம் அறிவு றுத்தியுள்ளது.
இதேவேளை சதொச கிளைகளில் கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.