Date:

ஆப்கானிஸ்தான் பெண் பிள்ளைகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

ஆப்கானிஸ்தானில் 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மீள திறக்கப்பட்ட அனைத்து பெண்கள் உயர்நிலை பாடசாலைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 07 மாதங்களுக்கு பின்னர் முதல்தடவையாக மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள் சில மணித்தியாலங்களில் நேற்று மூடப்பட்டுள்ளன.

இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிய கலாசாரத்தின் படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பாடசாலைகள் மூடப்படும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தலிபான் ஆட்சியாளர்கள் பாடசாலை மாணவிகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் புதிய அறிவிப்பொன்றை வௌியிட்டிருந்தனர்.

குறித்த அறிவிப்பில் மாணவிகள் 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அடுத்த சில மணித்தியாலங்களில் தலிபான்கள் இந்த தீர்மானத்தை மாற்றியுள்ளனர்.

இதனையடுத்து 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்க மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...