Date:

சிங்கள – தமிழ் புத்தாண்டு முடியும் வரை எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை- லிட்ரோ

சிங்கள – தமிழ் புத்தாண்டு முடியும் வரை லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என நிறுவனம் நேற்று (22) தீர்மானித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சனிக்கிழமையுடன் (26) முடிவுக்கு வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வாரம் இலங்கைக்கு வந்த எரிவாயுவுக்கான பணத்தை இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் ( 21) கையளித்துள்ளது. இது பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். அதன்படி 3500 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நேற்று (22) ஆரம்பமானது.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் இரண்டு எரிவாயு தாங்கிகள் எதிர்வரும் வியாழன் மற்றும் சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளன.

அதன்படி, லிட்ரோ இந்த வாரம் தினசரி 120,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373