Date:

தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதற்கு பொறுப்பு அரசாங்கமே!

மருந்து தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக மின்சாரம் மற்றும் அவசியமான எரிபொருள் என்பவற்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரப்பட்ட போதிலும் அது இதுவரையில் இடம்பெறவில்லை என அந்த சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்திக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அவசர சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகளுக்கு பொறுத்தமான சிகிச்சைகள் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

எனினும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...