Date:

இறைச்சி எலும்பின் அளவு குறைந்ததன் காரணமாக புலம்பும் கூட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்க முடியாது-அனுரகுமார

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச உள்ளிட்ட தலைவர்களின்  11 கூட்டணிக் கட்சிகள் அடங்கிய அணி அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாத அணி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த கூட்டணிக் கட்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த அணியினர் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் இறைச்சி எலும்பின் அளவு குறைந்ததன் காரணமாக புலம்பும் கூட்டம். இதனால், இந்த அணியினருக்கு அரசாங்கத்துடன் இருக்கும் மோதல் கொள்கை ரீதியான மோதல் அல்ல.

இந்த அணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இருந்து வரும் மோதல் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றல்ல எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

11 கட்சிகள் அடங்கிய அணியின் பிரதான பிரமுகரான விமல் வீரவங்ச, மக்கள் விடுதலை முன்னணியின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். எனினும் கடந்த காலம் முழுவதும் அவர் மக்கள் விடுதலை முன்னணியை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...