Date:

ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – எதிர்க்கட்சியினர் போராட்டம்

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வாயிலுக்கு முன்பாக சுகாதார வழிமுறைகளுக்கு இணங்க இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, பதாதைகளை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது, விவசாயிகள், மீனவர்கள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், பொது மக்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என இவர்களால் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலியர்களுக்கு மாலைத்தீவு தடை

இஸ்ரேலிய கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் மாலத்தீவு குடியரசிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்...

வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று(16) தபால் நிலையங்களுக்கு...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.   ரிச்டர் அளவுகோலில் 5.9...

நிலவும் வெப்ப நிலை குறித்து எச்சரிக்கும் வைத்தியர்கள்!

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373