நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின்போது பொருளாதார, அரசியல் நெருக்கடி மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.