Date:

எண்ணெயை கொள்வனவு செய்ய சென்ற பெண் மயங்கி வீழுந்த சம்பவம் கொழும்பில் பதிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் விற்பனை நிலையங்களுக்கு எதிரில் நீண்ட வரிசைகளில் மக்கள் பல மணி நேரம் நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிரில் வரிசைகளில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நகர புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எதிரில் இதனை பரவலாக காண முடிவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்றுள்ளனர்.

வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மண் எண்ணெயை கொள்வனவு செய்ய சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். அப்போது வரிசையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...