Date:

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சர்வதேச நாணய நிதியம்- இலங்கைக்கு கரம் கொடுக்குமா?

இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோரிக்கை விடுக்கப்பட்டால், அதை பரிசீலிக்கலாம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்த உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டமொன்றுக்கு வருவதினூடாக, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான திசையில் செலுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...