Date:

உறங்கிய பொலிஸ் அதிகாரி; மீண்டும் வௌியில் வராத நிலையில் மரணம்

இன்று மாலை வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

நேற்று இரவு தனது அறையில் உறங்கியவர் மீண்டும் வௌியில் வராத நிலையில் அவரது பிள்ளைகள் மதியம் கதவை உடைத்தபோது அவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில் வசித்து வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான 60 வயதுடைய முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் என்பவரே மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவசர சேவை பிரிவின் வாகன உதவியுடன் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373