Date:

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவனிக்கப்பட்ட கருத்துக்கள்

கொழும்பை முடக்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் முன்னெடுத்திருந்தது.

பொதுமக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உங்களால் முடியாதென்றால் நாட்டை எங்களிடம் தந்து விடுங்கள் நாங்கள் செய்து காட்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடிகளாகும். இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும். அன்று மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேரணியில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில், வீட்டிற்கு செல்லுமாறு கூறவே மக்கள் அனைவரும் கொழும்பிற்கு வந்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வரையில் நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹர்ஷ டி சில்வா கூறுகையில், டொலரொன்றின் விலை 200 ரூபாவாக இருக்கும் போதே இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம் எனினும் இன்று பிற்பகலாகும் போது டொலரின் விலை 280 ரூபாவாக ஆகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கையில், நீங்கள் செய்தது போதும், வீட்டிற்கு போங்கள் என்ற விடயத்தை கூறவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...

இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ்...

Breaking தலாவ பேருந்து விபத்தில் ஐவர் பலி – 25 பேர் காயம்

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது

புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண...