Date:

இவ்வருட இறுதிக்குள் அரசின் வெளிநாட்டுக் கடன் 11 பில்லியன் டொலர்களாகக் குறையும் -பசில்

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சில இடர்கள் மிகைப்படுத்தப் பட்டதாக நிதியமைச்சு அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சில இடர்களை நிவர்த்தி செய்வதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 11 பில்லியன் டொலர் களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

உணவுப் பணவீக்கம் 25% ஆக உள்ளதாகவும், அதனைக் குறைக்க தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேவை அடிப்படையிலான பணவீக்க அழுத்தங் களைக் குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கடுமையான நாணயக் கொள்கை யொன்றை நடைமுறைப்படுத்துகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறையும் போது பொருளாதாரம் மீண்டும் செயற்படுத்தப்படும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...